தமிழ்நாட்டில் டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கங்களுக்கு அனுமதி == நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளேன்.

Views : 181

பதிவு செய்த நாள் 06-Apr-2023

தமிழ்நாட்டில் டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கங்களுக்கு அனுமதி

==

நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளேன்.

===

பின்வருமாறு அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளேன்:

தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதிய நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடும் திட்டத்தை மத்திய நிலக்கரி அமைச்சகம் அறிவித்துள்ளது. 17வது கப்பல் ஏலத்தின் கீழ் 101 நிலக்கரி சுரங்கங்கள்/ தொகுதிகளை CM (SP) சட்டம், 2015 மற்றும் 7வது கப்பல் ஏலத்தின் கீழ் ஏலத்தை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்ட அதிகாரசபைக்கு இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. CM(SP) சட்டம், 2015 மற்றும் MMDR சட்டம் 1957 இன் கீழ் 6வது ஏலத்தின் இரண்டாவது முயற்சி. டெண்டர் செயல்முறை மார்ச் 29, 2023 புதன்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு பகுதிகளில் நிலக்கரி சுரங்கத்திற்கு டெண்டர் வரவேற்கப்பட்டுள்ளது.

அஇஅதிமுக ஆட்சியில் இருந்த போது தமிழகத்தில் டெல்டா பகுதியில் பல ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கொண்டு வர ஒன்றிய அரசு முயற்சித்தது. அப்போது தமிழகத்தில் அரசியல் கட்சிகள், விவசாயிகள் இயக்கங்கள் கடுமையாக போராடினதால் திட்டம் கைவிடப்பட்டு டெல்டா பகுதிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.

தமிழக அரசிடம் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழகத்தில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கும் திட்டத்தை உடனடியாக கைவிட ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.