“ தேசிய திறமை தேடல் திட்டம் ( NTSS) 2021 உடன் நிறுத்தப்பட்டுவிட்டது”

Views : 85

பதிவு செய்த நாள் 15-Mar-2023

“ தேசிய திறமை தேடல் திட்டம் ( NTSS) 2021 உடன் நிறுத்தப்பட்டுவிட்டது”

நான் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் தகவல்

பள்ளி மாணவர்களிடையே அறிவியல் உணர்வைத் தூண்டி அவர்களை விஞ்ஞானிகளாக வளர்த்தெடுக்கும் திட்டம்தான் தேசிய திறமை தேடல் திட்டம்( NTSS )ஆகும்.

அ) ​​தேசிய திறமை தேடல் திட்டத்தின் (NTSS) கீழ் வழங்கப்படும் உதவித்தொகை விவரங்கள்

 ஆண்டுகள் 2019 முதல் 2021 வரை, ஆண்டு வாரியாகத் தெரிவிக்கவும்;

 (ஆ) திறமையான மாணவர்களை அடையாளம் காண NCERTக்கு NTSS உதவியிருக்கிறதா?;

 (இ) தேசிய திறமை தேடல் திட்டத்தை அரசாங்கம் தொடர்கிறதா; மற்றும்

 (ஈ) இல்லையென்றால், அது நிறுத்தப்பட்டதற்கான காரணங்கள் என்ன?

என்ற வினாக்களை இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பினேன். அதற்கு மாண்புமிகு ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் அன்னபூர்ண தேவி அவர்கள் பின்வருமாறு பதில் அளித்தார் :

b) ஆம், திறமையான மாணவர்களை அடையாளம் காண NCERTக்கு NTSS உதவியது. NTS விருது பெற்ற பலர், உலகெங்கிலும் உள்ள பல்வேறு புகழ்பெற்ற நிறுவனங்களில் முன்னணி பதவிகளில் பணியாற்றி வருகின்றனர்.

 (c&d) NTSS என்பது கல்வி அமைச்சகத்தால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட ஒன்றிய அரசின் திட்டமாகும். NTSS அதன் தற்போதைய வடிவம்/வடிவத்தில் 31.03.2021 வரை தொடர்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் திறமையைக் கண்டறிந்து வளர்ப்பதற்கான நோக்கம் திறம்பட நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்யும் வகையில் திட்டத்தை மறுவடிவமைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ள அமைச்சர் 2019 முதல் 2021 வரை ஒவ்வொரு ஆண்டும் அந்தத் திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையையும் தந்துள்ளார்.

கல்வியில் அறிவியல் சிந்தனைகளை ஒழித்துவிட்டு சமயச்சார்பான கருத்துகளைத் திணித்துவரும் பாஜக அரசு பள்ளி மாணவர்களிடையே அறிவியல் சிந்தனையை வளர்த்தெடுக்கும் இந்தத் திட்டத்தை நிறுத்திவிட்டது. நிறுத்திவிட்டதாக ஒப்புக்கொள்ளாமல் மாற்றி அமைக்கப்போகிறோம் எனக் கூறுகிறார்கள்.